கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நாள்தோறும் செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்களை கொண்டு எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு பார்வைத்திறனை பாதுகாக்கலாம். தினமும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது வறட்டு தன்மையிலிருந்து கண்களை பாதுகாக்கும். கண்களை சிமிட்டுவது கண்களுக்கு வெளியே நாம் கொடுக்கும் சிறு பயிற்சி. அதேபோல் கண்களுக்குள் இருக்கக்கூடிய கருவிழிகளை அசைத்து எட்டு […]
