தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் படுக்கைகளுடன் கூடிய புதிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. […]
