மெய்நிகர் (Virtual Reality) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொந்தகையில் அமையவிருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கே பாண்டியராஜன் கூறியுள்ளார். மதுரையில் கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர் கே பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், “கீழடி தொல்பொருட்களை மூன்று அறைகளில் கண்காட்சியாக வைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்த்துச் செல்கின்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. […]
