தமிழக சட்டப்பேரவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. எனவே சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கிய போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகம் எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் […]
