அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுவடைந்து சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் மோதல்கள் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி, அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிரடி காட்டினார். ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி, OPS ஆதரவாளரான வைத்திலிங்கம் வகித்துவந்த துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டது. அ.தி.மு.க இடைக் கால பொதுச்செயலாளராக எடப்பாடி […]
