மாநகர பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைத்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வே வரை செல்லக்கூடிய வழித்தட எண் 21 என்ற மாநகரப் பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்டபொழுது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவர்கள் திடீரென மாநகரப் பேருந்தின் முன்பக்க […]
