கேரளாவின் வளர்ச்சியை முடக்கும் வகையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்தி வரும் விசாரணையில் அமைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்க கடத்தல் வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்களை விட்டு விட்டு விசாரணைக்கு வெளியே அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருவதாக சாடியுள்ளார். விசாரணை தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் யார் தங்கம் கடத்தியது ?யார் பெற்றது ? போன்ற விவரங்களை அமலாக்கத்துறை கண்டுபிடிக்கவில்லை […]
