பண்ணாரியம்மன் கோவில் அருகே காட்டு யானை அங்குமிங்குமாக அலைந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த கோவில் சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் யானைகள் தண்ணீரைத் தேடி ரோட்டை கடந்து சென்று வருகிறது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக் கொண்ட காத்திருந்தனர். இதனால் […]
