வெப்பம் தாங்க முடியாமல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள் சோர்வுடன் காணப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாரியப்பன், கலீம், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் […]
