சேற்றில் வழுக்கி விழுந்து யானை இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் காப்புக்காடு, குரும்பனூர் சரக பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் எண்ணமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் அருள்முருகன் ஆகியோர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் […]
