உயர் மின் அழுத்தம் தாக்கி யானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் தென்னமநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுச்சாமி. இவர் குளத்தேரிப் பகுதியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் போது யானை அல்லது காட்டுப்பன்றிகளிடமிருந்து நெற்பயிரை காப்பாற்ற தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் இருந்து 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு யானைகள் வெளியேறியது. […]
