மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து மின்சார வாரிய ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மின்வாரியத்தில் சிறப்பு நிலை ஆக்க முகவராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன். இவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர் பணி ஓய்வு பெற இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் அவரை கீரனூர் கோட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர். இந்த உத்தரவை பிறப்பித்த புதுக்கோட்டை மின்சார மேற்பார்வை பொறியாளர், […]
