காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தீவிரவாதிகளுக்கும் , பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான தேர்தல் அறிக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். காங்கிஸ் கட்சி நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும், தேசத்துரோக சட்டம் நீக்கம் , ஜம்மு-காஷ்மீர் மாநிலதலைவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். […]
