5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து கல்வியாளர்களுடன் தமிழ்நாடு அரசு கலந்தாலோசிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பாலகிருஷ்ணன், 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அமைச்சரிடம் […]
