கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஜோதியும், கட்டிட மேஸ்திரியான முத்தையா என்பவரும் கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் இருக்கும் ஒரு கடையில் கருவாடு வாங்கியுள்ளனர். அதன்பிறகு ஜோதி கடை காரரிடம் 200 […]
