நைஜீரிய நாட்டை சேர்ந்த வியாபாரி அமெரிக்க டாலர்களை மாற்றுவதற்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நாதன் இட்சாகு என்பவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நாதன் அமெரிக்க டாலர் நோட்டுகளை கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொடுத்து அதனை இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாலச்சந்திரன் என்பவர் அந்த டாலர் நோட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளார். […]
