கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்ற இரவு விருந்தின்போது மது மற்றும் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக மதுரை சிறப்பு போதை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த […]
