சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்த குற்றதிற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் அதனை ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்வதாகவும் தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆர்.எஸ். புரம் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பூபதி, கார்த்திக், உமா, மாரிமுத்து ஆகியோர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு கடைக்கு தொடர்ந்து வருகின்ற […]
