வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தூய்மைத்திட்ட பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் மின்வாரிய காலனி, தாமரைகுளம், கே.கே சாலை, திருச்சி சாலை போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் டி.மோகன் தொடங்கி வைத்துள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்த தூய்மைப் பணிமுகாமை 6 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
