ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டினார். சேலத்திலுள்ள தனியார் விடுதியில் திராவிடர் கழகத் தலைவர் கீ வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வினால் 8 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாகவும், இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். சமஸ்கிருதத்தினை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வி கொள்கை உள்ளதாக குற்றஞ்சாட்டினார். ஹைட்ரோகார்பன் திட்ட […]
