ஆளைப் பிடித்து உயரவேண்டும் என்ற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைப்படுகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் வார இதழ் துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார். மேலும் ஒருவன் உடல் நலத்தோடு வாழ்ந்தால் அதைவிட செல்வம் எதுவும் கிடையாது எனவும், உடற்பயிற்சி விளையாட்டு பற்றி தெரியாத குழந்தைகளாக இன்றைய தலைமுறையினர் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்கள் மக்களின் கவனத்தை மாற்றுவதாகவும் அவர் கூறினார். […]
