வெறி நாய் கடித்ததால் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த புதரில் இருந்து ஓடி வந்த வெறி நாய் பயணிகளை கடித்ததால் அவர்கள் அலரியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வெறிநாய் அவர்களை துரத்தி சென்று கடித்ததால் சாமிகண்ணு(70), அஞ்சலம்மாள்(70), சஞ்சய்(9), நிகாஷ்(14) ஆகியோர் காயமடைந்தனர். இதனை அடுத்து தெருத்தெருவாக ஓடிய வெறிநாய் ராஜேந்திரன்(59), அலமேலு(40), மேகராஜன்(55) என […]
