வாகனசோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 3 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது . இதனால் பொதுமக்களுக்கு பணமோ, பரிசுபொருளோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரமூர்த்தி பட்டி பேருந்து நிறுத்தத்தில் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா […]
