கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எம்.ஜி.ஆர் நகரில் அரசு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு கீழ் கருமலை, வாட்டர்பால்ஸ், சோலையாறு என்ற 3 துணை கால்நடை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று சென்ற பிறகு இங்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் […]
