அரசு மருத்துவர் சரியாக பணி புரியாத காரணத்தினால் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இந்த மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவர் மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை எனவும் மருத்துவர் மீது பொதுமக்கள் […]
