Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு வர்ணம் பூசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம்..!

திருவள்ளுவர் சிலைக்கு காவி வர்ணம் பூசியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி திமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர் சிலைக்குகு காவி உடை அணிவித்து தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி செயலாளருமான இந்திரகுமாரி கலந்துகொண்டார். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக இலக்கிய அணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking : துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதி….. கவலையில் திமுகவினர் …!!

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும் , வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த்தின்  தந்தையுமான துரைமுருகன் உடல் சோர்வு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகின்றது. முக்கிய தலைவராக திகழும் இவரின் மருத்துவமனை அனுமதி திமுகவினரை கவலையடைய செய்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது’ – விஜய பாஸ்கர்

மலிவான அரசியல் செய்து வரும் ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி அமைக்கப்படும் என்று அறிவித்ததன் கீழ் புதுக்கோட்டை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் பேனர்: திமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு…..!!

திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு இல்ல நிகழ்ச்சிக்காக பேனர்கள் வைக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனின் திருமண விழா கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. பின்பு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பணகுடி மெயின் ரோட்டில் உள்ள ஜான் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது ? உயர்நீதிமன்றம் காட்டம் …!!

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  நீட்தேர்வு ஆள்மாறாட்டம் குறித்த பல்லக்கு  கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு விசாரித்தது இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கறிஞர் தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்  கைரேகை , ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் , தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு காலத்தில் விசாரணையை முடிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவி உடையா ? கொதித்தெழுவார்கள்….. பதிலடி கொடுப்பார்கள்…. வைகோ ஆவேசம் …!!

திருவள்ளுவர் குறித்து பாஜக பதிவிட்டுள்ள கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. இதற்க்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு குறள் விளக்கம்: எல்லா எழுத்துக்களும் […]

Categories
மாநில செய்திகள்

திருக்குறளுக்கு புதிய விளக்கம் கொடுத்த ஹெச். ராஜா ட்வீட்டால் சர்ச்சை…!!

 ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. மானுட நேயத்தைப் போதித்த திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வாரிசு இருந்தால்தான் அரசியலுக்கு வரமுடியும்’ – ஸ்டாலின் காட்டம்

வாரிசு இருந்தால்தான் அரசியலுக்கு வரமுடியும், வாரிசு இல்லையென்றால் எப்படி வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பெரியார், அண்ணா, கலைஞர் என அனைவரும் இன்றும் நம் உயிரோடு கலந்து உள்ளனர். அவர்கள் நம்மோடு இருக்கும் வரை எந்த கொம்பனாலும் இங்கு வந்து நுழைந்து விட முடியாது. வாரிசு அரசியலை பற்றி சிலர் விமர்சனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”குறளை தப்பு இல்லாம சொல்லுங்க” அசிங்கபட்ட முக.ஸ்டாலின் ….!!

முக.ஸ்டாலின் திருக்குறளை தவறுமின்றி உச்சரித்தால் பாஜக பதிவை நீக்கி விடுகின்றோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை பதிவிட்டு அதில் இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன் என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குறளை கற்று திராவிடர் கழகமும் திமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் துரோகம் …. ”படிச்சு திருந்துங்க” …. பாஜகவுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் …!!

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”காவி உடையில் வள்ளுவர்” நம்பி வாழும் கம்யூனிஸ்ட் ….. கிளம்பிய சர்சை …!!

காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற […]

Categories
மாநில செய்திகள்

சுஜித் குடும்பத்திற்கு முக ஸ்டாலின் ரூ.10,00,000 நிதியுதவி..!!

சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் முக ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருச்சி மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆழ்துளை கிணறு அருகே ரிக் இயந்திரம் மூலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு” ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் – கடம்பூர் ராஜீ

சதுரங்க வேட்டை படத்தைப் போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது. இதன் 9ஆம் திருவிழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு விடுமுறை நாள்களில் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி ஏற்கனவே நடைமுறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரியில் காங்கிரஸ் படுதோல்வி – காரணம்?

நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் படுதோல்வி அடைந்துள்ளார். இடைத்தேர்தல் அறிவித்த சமயத்தில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியை திமுகவிடம் பெரிதும் போராடி காங்கிரஸ் பெற்றது என தகவல்கள் அப்போது வெளியானது. காங்கிரஸ் பலம் பெற்ற தொகுதி என கூறப்பட்ட நிலையில் தற்போது நாங்குநேரியில் காங்கிரஸ் படுதோல்விக்கான காரணம் என்ன என கேள்வி எழுந்துள்ளது.நாங்குநேரி சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 33 ஆயிரத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் திமுக தோல்வி! – ஒரு அலசல் டேட்டா ரிப்போர்ட் …!!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் தோல்விக்கான காரணம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதையடுத்து 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் தரப்புக்கு வெற்றி கிட்டியது. திமுகவின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. விக்கிரவாண்டியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 40 விழுக்காடு உள்ளனர். பட்டியலினத்தவர்கள் 25 விழுக்காடும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினரும் மற்ற சமுகத்தினர் சொற்ப அளவிலும் உள்ளனர். இத்தொகுதியில் இரு கட்சிகளும் (திமுக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்…!!

விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படத்திற்கு முதலமைச்சரின் ஆலோசனையின்பேரில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சி என்ற பெயரில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துடிக்கின்றோம்…. மனம் கனக்கிறது! முக.ஸ்டாலின் வேதனை …!!

ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை விரைந்து மீட்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 தொகுதியிலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்கின்றனர். தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிக்கு கடந்த  21_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும் , நாங்குநேரியில் நாராயணனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். திமுக தலைமையிலான கூட்டணியின் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனும் , விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதே போல நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மறக்க மாட்டேன் ”என்னை வச்சு செஞ்சுட்டிங்க” காங். வேட்பாளர்…!!

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற  ஜான்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். புதுச்சேரியில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே வெற்றிபெற்ற […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

”இந்த வெற்றி எங்களுக்கு தீபாவளி பரிசு” புதுவை முதல்வர் பேட்டி …!!

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார். புதுச்சேரியில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

இனி வேற மாறி ஆடுவோம்… ” ஆட்டம் வலிமையா இருக்கும்”…. சீமான் பேட்டி ….!!

அதிமுகவின் வெற்றி பெறப் பட்டவை அல்ல 2000 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை  முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி நாங்கள் மட்டும் தான் ”எங்கள் காலம் தான்” பொன்.ராதாகிருஷ்ணன்….!!

அதிமுகவின் வெற்றியில் பாஜகவிற்கு பங்குள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை  முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் பாண்டவர் படைகள் ”ஓடி ஒளிஞ்சுட்டாங்க” அமைச்சர் ஜெயக்குமார்  …!!

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி என்பது அரசுக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை  முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.அந்தவகையில் தமிழக மீன்வளத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட பாவமே.! வெறும் 11 ஓட்டு தானா ? ….. ”அதோ கதியில் நாம் தமிழர்”….. பரிதாபத்தில் சீமான் …!!

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி மிகவும் சொற்ப அளவுக்கு சரிந்துள்ளது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில்  தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் , புதுவை இடைத்தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3,494 ஓட்டு…. நான்காம் இடம் …. தூக்கி எறியப்பட்ட நாம் தமிழர் …..!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்  நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வாக்காளர்களுக்கு நன்றி” – ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை ….!!

நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில்  அதிமுக வெற்றியடைந்ததை அடுத்து OPS , EPS கூட்டறிக்கை விடுத்துள்ளனர் மஹாராஷ்டிரம் ,ஹரியானா மாநிலங்களின் சட்டசபை மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் இடைத்தேர்தல்  கடந்த 21_ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறது. அதன் முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி மற்றும் திமுக வசம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி பெற்று விட்டேன் ….. சான்றிதழை வாங்கிய புதிய MLA ….!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற முத்தமிழ் செல்வன் அதற்கான சான்றிதழை பெற்றார். கடந்த 21_ஆம் தேதி தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒட்டு மொத்த வாக்குப்பதிவையும் இன்று காலை 8 மணிக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 94,562 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44,5782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” ஸ்டாலின் அறிக்கை ….!!

நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரம் ,ஹரியானா மாநிலங்களின் சட்டசபை மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் இடைத்தேர்தல்  கடந்த 21_ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறது. அதன் முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி மற்றும் திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆரம்பத்தில் இருந்து அதிரடி.. ”திமுகவை தூக்கிய அதிமுக”…. அசத்தல் வெற்றி …!!

தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING: திமுகவை ”தெறிக்க விட்ட அதிமுக” நாங்குநேரியில் வெற்றி….!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவின் கூட்டணியில் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING: ”விக்ரவாண்டியில் அதிமுக வெற்றி” திமுகவை பந்தாடியது ….!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடர்ந்து முன்னிலை ”அதிமுக_வுக்கு திடீர் சறுக்கல்” … எகிறும் காங்கிரஸ்…!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் 9_ஆவது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளது. காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.   […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரியில் அதிமுக 14,266 வாக்குகள் முன்னிலை ….!!

விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகின்றது. காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.   இதில் அதிமுகவின் கூட்டணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் அதிமுக 29,591 வாக்குகள் முன்னிலை ….!!

விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகின்றது. காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவின் கூட்டணியில் விக்கிரவாண்டியில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை ஜான்குமார் பெற்றார் …!!

காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தலை நடத்தும் அலுவலரிடம் பெற்றார். காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கை ஓங்குமா? இலை துளிர்க்குமா? பெரும் எதிர்பார்ப்பில் நாங்குநேரி….!!

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ், அதிமுக இடையே ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி அக்டோபர் 21ஆம் தேதியன்று அத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மொத்தம் 66.35 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 299 […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

“நில அபகரிப்பு, மோசடி” 2 வழக்கு…… மதுரை கோர்ட்டில் மு.க.அழகிரி ஆஜர்…!!

தயா இன்ஜினீயரிங் கல்லூரிக்காக கோயில் இடங்களை  ஆக்கிரமித்த வழக்கின் விசாரணைக்காக மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜரானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமாகிய மு.க.அழகிரி அவரது மகன் துரை தயாநிதி பெயரில் தயா இன்ஜினீரிங் கல்லூரியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தயா இன்ஜினியரிங்  கல்லூரி கட்டுவதற்காக விநாயகர் கோவில் இடத்தை ஆக்கிரமித்ததாக அழகிரி மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாமூல் வாங்க தீவிரம்…. டெங்கு ஒழிப்பில் மந்தம் ….. ஸ்டாலின் குற்றசாட்டு …!!

டெங்குவை கட்டுபடுத்த திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் டெங்கு பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசும் , சுகாதாரத்துறையும் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெங்கு பரவாமல் இருக்க திமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கு நிகச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதை அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வட இந்திய மாணவர்களே அதிகம்… “நம் மாணவர்களுக்கு வாய்ப்பில்லை”… எம்பி கனிமொழி பேச்சு.!!

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வெளிநாடுகளில் நம் மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையெனப் பேசினார். கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டன. அப்போது கனிமொழி பேசுகையில், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பிற்கு எந்த நிறுவனம் வேலை தரும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்முகத் தேர்விற்குச் செல்லவேண்டும், பல நேரங்களில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று தெரியமால் தவற விட்டுவிடுகிறோம் என்று […]

Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு வருஷம் ஆச்சு….. இன்னும் கிடைக்கல , என்ன செய்ய நாங்க…. அரசு மீது MLA பாய்ச்சல் …!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை என திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆடலரசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-திருவாரூர்    மாவட்டத்தில் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், திருத்துறைப்பூண்டி தொகுதி சிக்கியது. இதனால் ஆறு மாத காலமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மிகப்பெரிய ஒரு பேரிடரை சந்தித்துள்ளனர். மேலும் தொகுதி முழுவதும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டபோதும் […]

Categories
அரசியல்

ஸ்டாலின் சொல்வதெல்லாம் உண்மை…… உண்மையை தவிர வேற எதுவும் இல்லை…… புதுச்சேரி முதல்வர் கருத்து….!!

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்த ஸ்டாலின் கருத்து முற்றிலும் உண்மையானது என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், காமராஜ் நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்றும் தங்களது கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பதாக மக்கள் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்மேலும், செயல்படாத அரசை நடத்திய ரங்கசாமி தங்கள் ஆட்சியை குறை கூற தகுதி இல்லை என சொன்ன அவர், அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் எண்ணத்துடன் துணைநிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று”… கனிமொழி பேட்டி..!!  

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் சார்பாக செர்பியாவில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு இந்தியா சார்பில் சென்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற பொதுக்கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் என்னை அனுப்பிய சபாநாயகருக்கும், தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிரூபியுங்க….”நான் அரசியல விட்டு போறேன்” …. ஐயாவுக்கு தளபதி பதிலடி …!!

முரசொலி இருக்கும் பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஸ்டாலின் ராமதாஸ்_க்கு பதிலடி கொடுத்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆஹா.! அற்புதம் …. ”வளைக்கப்பட்ட பஞ்சமி நிலம்” ஸ்டாலினை சீண்டிய ராமதாஸ் ….!!

முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட PMK ங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ”சம்பளத்துடன் பொதுவிடுமுறை” அரசானை வெளியீடு ….!!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அசுரனை பார்த்த ஸ்டாலின்…… அசந்து போன தனுஷ்….!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை குவித்து வருகிறது. அந்த வகையில் அசுரன் படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் திரைப்பட கலைஞர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் அசுரன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுகவும் , ஊழலும் மூன்றெழுத்து” அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் …!!

திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து  என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. […]

Categories
அரசியல்

அசுரன் படம் அல்ல பாடம்…… வெற்றிமாறன் ,தனுஷுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து….!!

அசுரன் படத்தை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அதிகம்  பகிரப்பட்டு வருகிறது . தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் […]

Categories
அரசியல்

”என்னைப் பார்த்து சிரித்தார்” OPS முதல்வர் பதவியே போச்சு – முக.ஸ்டாலின் …!!

ஓ. பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து சிரித்ததால்தான் அவருக்கு முதலமைச்சர் பதவி பறிபோனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.இதையடுத்து அவர் பரப்புரையில் பேசியதாவது, “முதலமைச்சர் மனுக்களை வாங்கி ஒன்றும் செய்யவில்லை. எனவேதான் நான் மக்களிடம் மனுக்களை வாங்குகின்றேன். நாங்கள் அதிகாரத்தில் இல்லை, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உறுதியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதிமுகவினர் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேப்டன் வந்தாச்சு ….. ”தேமுதிக அதிரடி அறிக்கை”….. மகிழ்ச்சியில் அதிமுக …!!

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் […]

Categories

Tech |