Categories
அரசியல் மாநில செய்திகள்

பெருங்குளத்தூரில் 8 வழி சாலை…. பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

பெருங்குளத்தூரில் 8 வழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்  கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா கிழக்கு-மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க கோரி வலியுறுத்தியதோடு, மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்வியும் முன்வைத்தார். இதற்கு பதில் அளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” தேர்தல் ஆணையத்திற்கு 3 மாத கால அவகாசம்…!!

தமிழக தேர்தல் ஆணையத்திற்கு  உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை ரத்து செய்யக்கோரியதோடு, 6 மாத காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஆனால் தற்போது வரை தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது  பலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு…. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் பேட்டி…!!

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார். தொடர்ந்து  பேசிய அவர் , நான்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான கதவை மூடுகிறது – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான கதவை மத்திய அரசு மூடுகிறது என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு,  தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த சுற்றறிக்கை  போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
அரசியல்

தமிழ் தொன்மையை அழிக்க சதி…. ஸ்டாலின் குற்றசாட்டு..!!

தமிழின் தொன்மையை அளிக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக திமுக தலைவர்   ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழுக்கு சிறந்த தொண்டுகளாற்றிய அறிஞர்கள் குறித்து கவி பேரரசு வைரமுத்து எழுதிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவானது சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர்  ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதனை பெற்றுக் கொண்டார். இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட இனத்தின் பெருமைகளை சிதைக்கவும், தமிழ் மக்களின்  உரிமைகளை  பறிக்கவும்  சதி திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வைகோ …..!!

சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் , […]

Categories
மாநில செய்திகள்

“ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர்” கனிமொழி MP கோரிக்கை …!!

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டுமென்று மக்களவையில் திமுக MP கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த கூட்டத்தில்  உரையாற்றிய தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக M.P கனிமொழி , மத்திய அரசின் எல்லா திட்டங்களும் , எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரியும் படி  பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ,  தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு குறைவு  என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன்…வைகோ பேட்டி..!!

மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான், சந்திரசேகர், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட  சண்முகம்,வில்சன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 3 பேர் என மொத்தம் 6 பேர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு….பேரவை செயலாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 18ஆம் தேதி  மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மனு தாக்கல் செய்த   11 பேரில் வைகோவிற்கு மாற்றாக திமுக சார்பில் போட்டியிட இருந்த சம்பத் மற்றும்  சுயேச்சை வேட்ப்பாளர்கள்  உட்பட   5 பேர் தங்களது மனுக்களைத்  திரும்பப் பெற்றுக்கொள்ள 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான்,சந்திரசேகர்,பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

“மத்திய அரசின் திட்டத்தில் தமிழாக்கம்” கனிமொழி MP கேள்வி …!!

 மத்திய அரசின் திட்டம் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் “பிரதம மந்திரி” என்று அடங்கிய பெயர்களை  வைத்து திட்டங்களை செயல்படுத்துகின்றது. இது குறித்து இன்று நடைபெற்ற மக்களவையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் , எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே மத்திய அரசு பெயர் வைக்கிறது. தூத்துக்குடியில் ‘PM Sadak Yojana’ என ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூர் நாடாளுமன்ற தேர்தல்….வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்..!!

வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி  நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது. வேலூரில் ஏப்ரல் 18ஆம்  தேதி நடைபெற  இருந்த தேர்தலானது  ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம்  தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று முதல்  18ஆம்  தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள  புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீட் எதிர்ப்பு மசோதா நிராகரிப்பு” ஸ்டாலின் கண்டனம் …!!

தமிழக அரசு அனுப்பிய நீட் எதிர்ப்பு சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியளவில் மருத்துவ படிப்பிற்கு நீட் என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தும் கூட நீட் தேர்வை இந்தியளவில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையடுத்து தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.  ஆனால்  தமிழக அரசின் மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக சமீபத்தில் மத்திய அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை….ஸ்டாலின் கேள்வி..!!

10% இடஒதுக்கீடு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்த கட்சிகள் எதன் அடிப்படையில் அழைக்கப்பட்டன என்றும்,வருகை தந்த அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தான? என்றும்  திமுகவை சேர்ந்த துரைமுருகன் சட்ட பேரவைக் கூட்டத்தில்  கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் அழைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 பேர் விடுதலை “இனி ஆளுநர் தான் முடிவெடுக்கனும்” முதல்வர் பல்டி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நீதி நிர்வாகம் சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சன் 7 பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் , எங்கள் அதிகாரத்துக்குட்பட்ட அமைச்சரவையை கூட்டி தீர்மானனம் நிறைவேற்றி ஆளுநருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MP ஆகிறார் வைகோ…ஏற்கப்பட்டது வைகோவின் மனு..!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு பின் வேட்புமனு பரிசீலினையில் வைகோவின் மனு ஏர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர்  என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான  சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ மனு ஏற்கப்படுமா? தொடங்கியது பரிசீலினை…எதிர்பார்ப்பில் திமுக,மதிமுக..!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர்  என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான  சட்டப் பேரவை செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏற்கப்படுமா? “வைகோவின் வேட்பு மனு”இன்று பரிசீலனை..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க   வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேர்  என மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தினால்  […]

Categories
அரசியல்

அரசியலில் திடீர் திருப்பம்….கனிமொழிக்கு எதிராக தமிழிசை வழக்கு…!!

தூத்துக்குடி மக்களவையில் கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிராக பாஜக  தமிழிசை சௌந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  பெருமான்மை இடங்களில்  வெற்றி பெற்றது.அதே போல்  பாரதிய ஜனதா கட்சியானது தனிப்பெருமான்மையுடன்  வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட  வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி   மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் கனிமொழியும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜனும் போட்டியிட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அனைத்து கட்சி கூட்டம்” 21 கட்சிகளுக்கு அழைப்பு…!!

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் ம.நீ.ம சார்பில் கமல் பங்கேற்கிறார்…!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம் பங்கேற்குமா ? மக்கள் நீதி மய்யம் ……. தீடிர் ஆலோசனையில் நிர்வாகிகள் ..!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“10 சதவீத இட ஒதுக்கீடு” முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் அளித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் 10 % […]

Categories
மாநில செய்திகள்

“தலையில் இடி விழுந்தது போல் இருந்தது” வைகோ ஆவேசம் …!!

தீர்ப்பை பார்த்ததும் எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது என்று என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“MP கனவு கம்பி எண்ண வச்சுருச்சே” வைகோ குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்

எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என்று வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். கடந்த 2009 தி.மு.க ஆட்சி காலத்தில்  நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மதிமுக வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்  பேசியதாக தேச துரோக வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்  விசாரித்து வந்த நிலையில் வைகோ […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் விதிகளை மீறுகிறீர்களா??…அமைச்சரிடம் ஸ்டாலின் கேள்வி..!

வேலூரில் தேர்தல் நடத்தை   விதிமுறைகள்      அமலுக்கு     வந்தநிலையில்  புதிய  அறிவிப்புகளை வெளியிடுவது விதிமீறல் ஆகாத? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று புதிய அறிவிப்புகளை  மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட போது , வேலூர் மாவட்டத்திற்கும்  சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில்  இறுதி நேரத்தில் பேசிய திமுக  தலைவர் ஸ்டாலின், வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் விதிமீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கேள்விக்கு  […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை….ஒரு வாரத்தில் இயக்க அமைச்சர் உறுதி..!!

கள்ளக்குறிச்சியில்   சர்க்கரை  ஆலையை  ஒரு வாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் சம்பத் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள கூட்டுறவு  சர்க்கரை ஆலைகள் இயங்காமல் மூடிக் கிடப்பததால் , கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றனர். எனவே ,  ஒரு சர்க்கரை ஆலையையாவது இயங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து  அமைச்சர் சம்பத் பேசுகையில் , கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

பாலின் விலை உயர்வு…பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

சட்ட பேரவை கூட்டம் முடிவதற்கு முன் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 28ல் சட்டப்பேரவை தொடங்கி மானியாக்   கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து  இன்று நடைபெற்ற நீர்வளம்,பால்வளம்,  கால்நடை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்குமா…? வைகோ அதிரடி பதில் …!!

நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் சூழலில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” வைகோ பேட்டி …!!

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் தண்டனையாக ஓராண்டு சிறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு” சிறப்பு நீதிமன்றம் உத்தரவு …!!

தேச துரோக வழக்கில் வைகோ_வுக்கு ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்ததுசிறப்பு நீதிமன்றம். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது  மதிமுக வழக்கறிஞர்கள்  மல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறை செல்லும் வைகோ” குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு ….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல் துறையினர் 2009_ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு MP மற்றும் MLA_க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் அவர் மீது குற்றம் நிரூபணமாக்கப்பட்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நீதிபதி சாந்தி , உங்களுக்கான தண்டனையை அறிவிக்கப்பிக்கின்றேன் இன்று அறிவிக்கவா அல்லது திங்கள்கிழமை அறிவிக்கவா என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக … இந்தியளவில் ட்ரெண்டிங்… அதிர்ச்சியில் கழகத்தினர்..!!

திமுகவின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைதளவாசிகள்  கலாய்த்து வருவதால் திமுகவினர் வேதனை அடைந்துள்ளனர். ரெட்ஜெயண்ட் மூவி என்ற பெயரின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்து , நடிகராக தோன்றி, முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்தவர்  திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சினிமா துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர் திமுகவின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் , போராட்டம் மற்றும் […]

Categories
அரசியல்

கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!!

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார். திரைப்பட நடிகராகவும் முரசொலியின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். இதனை தமிழகம் முழுவதும் தற்போது திமுக தொண்டர்கள் உதயநிதி ரசிகர்கள் உள்ளிட்டோர் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் இளைஞரணி  செயலாளராக பொறுப்பேற்ற பின் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து  பெற்றார். இதனை  தொடர்ந்து, சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிக்கு பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது” சாமிநாதன் கருத்து …!!

 திமுக-வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள  உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்து வந்த சாமிநாதன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார்.  மேலும் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த சாமிநாதனுக்கு  திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் […]

Categories
அரசியல்

அன்பழகனிடமிருந்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் ..!!

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில்  திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தற்போது தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி வழிநடத்துவார்” வைகோ வாழ்த்து

திமுக இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி ஸ்டாலின் வழிநடத்தி செல்வார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.   இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார்” கே.எஸ்.அழகிரி வாழ்த்து …!!

திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக_வின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு …..!!

அமமுக சார்பில் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்ததை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் இளைஞரணி சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு ….!!

திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வந்த  வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு பிறகு திமுக இளைஞரணி மாநில செயலாளராக இருந்து வந்த அவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு  திமுக_வின் புதிய இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார்.இந்நிலையில் இளைஞரணி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் உறுப்பினராக […]

Categories
அரசியல்

“இளைஞரணி செயலாளரானார் உதயநிதி” ஸ்டாலினுடன் வாழ்த்து…

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில்  திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தற்போது தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கக்கூடிய  அவரது […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு” தமிழக அரசு அதிரடி …!!

தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 2000  ஊதிய உயர்வு வழங்கப்படுமென்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை  கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மர்க் ஊழியர்கள் , விற்பனையாளர்கள் , உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ள அறிவிப்பில் ,  டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக 2000 உயர்த்தி வழங்கப்படும். இதனால்    […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல்” RS பாரதி கருத்து ..!!

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுகிறது என்று  திமுக_வின் RS பாரதி தெரிவித்தார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய இளைஞர் அணியை இனிமேல் உதயநிதி ஸ்டாலின் வழிநடத்துவார். திமுக தலைவர் இளைஞர் அணி  செயலாளராக இருந்து திமுகவின் பொருளாளர் , செயல் தலைவரை என்று உயர்ந்து தற்போது தலைவராக இருந்து வருகின்றார். முக.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி “தமிழகம் முழுவதும் கொண்டாடும் தளபதி தொண்டர்கள்..!!

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.   இந்நிலையில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு பொறுப்பு “இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு” துரைமுருகன் கருத்து…!!

உதயநிதி ஸ்டாலினை  திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டது  வரவேற்கத்தக்கது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி…. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு …!!

திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய  இளைஞரணி திமுக_வில் உள்ள முக்கியமான அணியாக பார்க்கப்படுகின்றது.திமுகவில் 200க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன அதில் முக்கியமான அணியாக இளைஞரணி திகழ்கின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூருக்கு 5_ஆம் தேதி தேர்தல்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல்  ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற சூழலில் வேலூர் மக்களவை தொகுதி_க்கான தேர்தல் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்து செய்தது.இந்திய வரலாற்றிலேயே பணப்பட்டுவாடா_வால் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்றால் அது வேலூர் தொகுதி என்ற கடுமையான மோசமான வரலாறு பதிவாகி இருந்த நிலையில் தற்போது  மறு தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல்

“இடமறிந்து செயல்படுங்கள் TTV “அதிருப்தி MLA அறிவுரை..!!

தினகரன் இருக்கும் இடமறிந்து செயல்படவேண்டும் என்று அதிமுக MLA கலைச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார் . அதிமுகவில் எம்எல்ஏக்களாக   பணியாற்றி வரும் ரத்தினசபாபதி,பிரபு கலைச்செல்வன் ஆகிய மூவரும் டிடிவி தினகரன்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து அதிமுக அரசு தலைமை கொறடா கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவை  தலைவரிடம் பரிந்துரை செய்தார். அதன்பின் சட்டப்பேரவைத் தலைவர் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக_வில் இருந்து சென்றவர்கள் யாரும் தளபதிகள் அல்ல….TTV தினகரன் பேட்டி

அமமுக_வில் இருந்து வெளியேறியவர்கள் யாரும் தளபதிகள் அல்ல வெறும் நிர்வாகிகள் தான் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்வியையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுக_வில் இணைந்து வருகின்றனர். அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ் செல்வன் TTV_யுடன் ஏற்பட்ட மோதலில் திமுக_வில் இணைந்தார். அதை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த  இசக்கி சுப்பையா தாம் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்தார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது” அமைச்சர் உறுதி…!! 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் C.V சண்முகம் உறுதியளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி திமுக சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்  ராஜா  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. இதையடுத்து பேசிய  கனிமவளத்துறை அமைச்சர் CV.சண்முகம் பேசியதில் , தமிழகத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தாலும் , தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே  திட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு “கொடிய விஷம் கொண்ட பாம்பு” ஸ்டாலின் விமர்சனம் …!!

கொடிய விஷம் கொண்ட பாம்பு என்று பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை கடந்த மத்திய பாஜக அரசு  நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  நீட் தேர்வில்  சமூக நீதியை பறிகொடுத்து விட்டோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத […]

Categories

Tech |