தனது பயணத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என தமிழக ஆளுநர் R.N.ரவி அறிவுறுத்தி உள்ளார். தமிழக DGP சைலேந்திரபாபு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் R.N.ரவியை சந்தித்தார். அப்போது தனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்திய ஆளுநர் அந்த வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
