பிறந்தநாளையொட்டி வாளால் கேக் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 25ஆம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சதீஷின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்த அவரது நண்பர்கள், 20க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சக்தி நகர் கோவில் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அப்போது அவரது நண்பர்கள் சதீஷை வாளால் கேக் வெட்டுமாறு கூறியுள்ளனர். […]
