தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கொரோனாவுக்கு முன்புவரை ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காண சிறந்த வழியாக திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இந்த கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அதற்கான தீர்வை பெறுவார்கள். […]
