Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எச்சரித்த போலீஸ்காரர்…. வாலிபர்களின் மூர்க்கத்தனமான செயல்…. அதிரடி நடவடிக்கை…!!

போலீஸ்காரரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக்(38) என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அசோக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனால் அசோக் அவர்களை எச்சரித்துள்ளார். அப்போது நான்கு பேரும் அசோக்கை பலமாக தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கனவு மாணவர் விருது” சேலம் பள்ளி மாணவியின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய டி.ஆர் கவுஷிகா என்ற மகள் உள்ளார். இவர் ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டால்பின் அகாடமி கிராஸ்மின்டன் பயிற்சியில் தினமும் ஈடுபட்டு சிறுமி தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அடுத்து ஓவியம், கல்வி, விளையாட்டு என பல துறைகளில் சிறந்து விளங்கும் காரணத்தினால் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போனில் வந்த குறுந்தகவல்….. நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!!

நூதன முறையில் வாலிபரிடம் இருந்து பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துலுக்கநத்தம் கிராமத்தில் சாதிக் பாஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை வேண்டி இணையதள முகவரியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சாதிக் பாஷாவின் இணையதளம் முகவரிக்கு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி ஒரு தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை காப்பாற்ற சென்ற தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன் பால்குடி பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நெவுலி கண்மாயில் குளிப்பதற்காக ஸ்டாலின் தனது மூன்று வயது மகன் நிதிஷை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி தண்ணீருக்குள் விழுந்த நிதிஷை ஸ்டாலின் காப்பாற்ற முயன்ற போது இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடக்கவிருந்த திருமணம்…. கடைசி நேரத்தில் நிறுத்திய கர்ப்பிணியான ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நாகபிரியா(30) தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் சின்னச்சாமி(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனால் நாகப்பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வேறொரு பெண்ணுடன் சின்னசாமிக்கு திருமங்கலம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!!

வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள காமாளையம் 4-வது தெருவில் பாலாஜி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பாலாஜி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நண்பரான இஸ்மாயில் என்பவரை அழைத்துக் கொண்டு பாலாஜி மோட்டார் சைக்கிளில் ஓடையில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென உந்தன் நான்கு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கந்த சஷ்டி 2-வது நாள்…. முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி இரண்டாவது நாளை முன்னிட்டு சுவாமிக்கு சந்தனம், மஞ்சள், தயிர், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பூனையை கண்டுபிடித்தால் ரூ.10,000 சன்மானம்” வினோதமான சுவரொட்டி…. இணையதளத்தில் வைரல்….!!

கடலூர் மாநகர பகுதிகளில் நேற்று காலை ஆங்காங்கே ஒட்டப்பட்ட சுவரொட்டி பொதுமக்கள் வேடிக்கையாக பார்த்து சென்றுள்ளனர். அந்த சுவரொட்டியில் வெள்ளை நிற ஆண் பூனை, அதன் பெயர் ஜோஷி, வயது 3. ஒரு மாதத்திற்கு மேல் காணவில்லை. அதன் பெயரை சொல்லி அழைத்தால் உங்களை பார்க்கும். எனவே அடையாளங்கள் சரியாக இருந்தால் பூனையின் போட்டோ அல்லது வீடியோ எடுத்து முகவரிக்கு அனுப்பி செல்போனை தொடர்பு கொள்ளவும். அந்த பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“2 குழந்தைகளின் தந்தை”…. 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் 10- ஆம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் கடத்தி சென்று பாலியல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. தொழிலாளி செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சுந்தர்ராஜ்(28) என்ற மகன் உள்ளார். இவரும் 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு சுந்தர்ராஜ் மாணவியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து விடுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இன்று முதல்…. புதிய அபராதம் விதிக்கும் முறை அமல்…. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…!!!

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்ததன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று முதல் புதிய அபராதம் விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனை தூக்கி விளையாடிய தந்தை…. 1 1/2 வயது குழந்தை பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

தந்தை தூக்கி விளையாடிய போது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்பபட்டி பகுதியில் கொத்தனாரான காந்தவேல்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள்(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய ருத்ரா தேவி என்ற மகளும், 1 1/2 வயதுடைய கபிலன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 25-ஆம் தேதி காந்தவேல் தனது மகனை தூக்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த கபிலனை குடும்பத்தினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. 4 மாத குழந்தை-பாட்டி பலி…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!!

கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 மாத குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் எஸ்.எஸ் தேவி நகரில் பழைய இரும்பு வியாபாரியான வீரமணி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்த 4 மாதமேயான சாதனாதேவி, 2 வயதுடைய கிருஷ்கா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்காவை திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வருகிற 1- ஆம் தேதி…. மாவட்டம் முழுவதும் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தை முன்னிட்டு வருகிற 1- ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு பதிலாக வருகிற 12-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பணியில் தேவையான பணியாளர்கள் ஈடுபடலாம் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அடித்து சித்திரவதை செய்த தாய்” 2 வயது பெண் குழந்தை இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்புகடை பகுதியில் முகமது ரபீக்(34) என்பவர் வசித்து வருகிறார் இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தில்சாத் பானு(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பானு தனது 2 பெண் குழந்தைகளையும் அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு…. 40 பயணிகளின் நிலைமை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி மகாகாளியம்மன் கோவில் வீதியில் மருதாச்சலம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மருதாசலம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை இயக்கியுள்ளார். அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மீன்கரை ரோடு சீனிவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுமா…?? அதிவேகமாக சென்ற தனியார் பேருந்துகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனைஅடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி போலீசார் விழுப்புரம் பானாம்பட்டு பாதை சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய கார்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!!

கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.முத்துசாமிபுரம் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நல்லதம்பி என்பவருடன் நென்மேனி சாலையில் இருக்கும் மின்சார அலுவலகத்தில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் வாலிபர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த நல்லதம்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா” பரிதாபமாக இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செவுடிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 7 வாலிபர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் இருக்கும் மாஹிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து விட்டு வாலிபர்கள் தர்மடம் அழிமுகம் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அகில்(24), சுனில்(25) ஆகிய இரண்டு பேர் ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கபடி வீரர் மயங்கி விழுந்து இறப்பு…. நண்பர்கள் கூறிய உருக்கமான தகவல்…. பெரும் சோகம்…!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தி.புதுப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அடைக்கலம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கபடி வீரரான அடைக்கலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நரியங்காடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் குன்றக்குடி அணிக்காக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் வெற்றி பெற்ற அணி அரை இறுதி சுற்றுக்கு தேர்வாகியது. இதனை அடுத்து சக வீரர்களுடன் போட்டி முடிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லையால் விஷம் குடித்த சிறுமி…. காதலன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ராஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ராஜா(22), சின்ராஜ்(21), பிரசாத்(19) ஆகியும் மூன்று பேரும் சிறுமியை தூக்கி சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து 3 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மஞ்சப்பை எடுக்க வெட்கப்படாதீங்க” பாடல் பாடி அசத்திய மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் கிராமத்தில் கிராமிய கலைஞரான இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் உருமராஜா, முத்துச்செல்வன் ஆகிய இரண்டு சிறுவர்களும் தாளம், இசையோடு விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தியுள்ளனர். அந்த பாடலில் மஞ்சப்பை எடுத்து செல்ல யாரும் வெட்கப்படக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் மண்வளத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவித்து, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அப்ரார் என்பவர் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் பைக்காரா செல்வதற்காக மாலை 4 மணிக்கு 9-வது மேல் அருகே சென்ற அப்போது பைக்காரவிலிருந்து ஊட்டி நோக்கி வந்த காரும், சையத் அப்ராரின் காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சையத் அப்ரார், நிஜாம்(59), ஜாகீர்(19), பாஷில்(19), பிரசன்னா(38), கிறிஸ்டோபர்(36) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இளம்பெண் பாலியல் பலாத்காரம்” தொழிலாளர்களுக்கு உடந்தையாக இருந்த மூதாட்டி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்களான அண்ணாதுரை(56), ராஜேந்திரன்(45) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் அஞ்சலை(60) என்ற பெண்ணின் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பெரிய வழக்கு பதிந்த போலீசார் அண்ணாதுரை, ராஜேந்திரன், அஞ்சலை ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இப்படி செய்யாதீங்க”கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சித்தலாப்பட்டி பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுந்தர்ராஜனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சுந்தர்ராஜன் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காதலனுடன் மீண்டும் தொடர்பு…. கணவரை கொன்ற இளம்பெண்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களூர் பக்கம் போரம் கிராமத்தில் பாண்டிதுரை(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் நந்தினி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்தபோது ஒரு வாலிபருடன் நந்தினிக்கு காதல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த நந்தினியின் பெற்றோர் அவரை பாண்டித்துரைக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த நந்தினியை பாண்டித்துரை கண்டித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தினி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்த வேதனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதிகாரப்பட்டியில் கூலித் தொழிலாளியான ராஜா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜா நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து ராஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. விபத்தில் சிக்கி தந்தை பலி; சிறுவன் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு பள்ளி ஆசிரியரின் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சென்னப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னப்பன் டியூஷனுக்கு சென்ற தனது மகனை அழைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மகனுடன் அய்யம்பட்டி ஆத்துப்பாலம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உரக்குழியில் இறந்து கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!!

உரக்குழியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எலியார்பத்தி கிராமத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய யோக தார்விக்கா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் தனுஷ்கோடிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனதால் தனுஷ்கோடி தனது குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது தோட்டத்தில் உரக்குழிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூபபிரண்டாக தீப சுஜிதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென தீப சுஜிதா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் புதிய உதவி போலீஸ் சூப்பிரண்டாக பிருந்தா பொறுப்பேற்றார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பிருந்தா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். முதல்முறையாக ஐபிஎஸ் அதிகாரி பொள்ளாச்சி சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திரிசூலம் வைத்து வழிபட்ட திருநங்கை…. தாக்குதல் நடத்திய கிராம மக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூ.மணவெளி கிராமத்தில் வாசுகி என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டி அந்த இடத்தில் திரிசூலம் வைத்து வழிபட்டுள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாசுகியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாசுகிசு சக திருநங்கைகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் புவனகிரி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்கள்…. “புள்ளிங்கோ ஸ்டைல்” தலைமுடியை வெட்டிய போலீசார்…. அதிரடி நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(20) என்ற மகன் உள்ளார். இவரும் சுபாஷ் சந்திரபோஸ்(22) என்பவரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இந்நிலையில் அருண்குமாரும், சுபாஷ் சந்திரபோஸும் பாலக்கரை பகுதியில் பட்டாகத்தி மற்றும் உருட்டு கட்டைகளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து பட்டாகத்தி மற்றும் உருட்டுக்கட்டையை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து போலீசார் சலூன் கடைக்காரர் ஒருவரை காவல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விரட்டி சென்று கடித்த வெறிநாய்…. காயமடைந்த 30 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

வெறி நாய் கடித்ததால் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த புதரில் இருந்து ஓடி வந்த வெறி நாய் பயணிகளை கடித்ததால் அவர்கள் அலரியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வெறிநாய் அவர்களை துரத்தி சென்று கடித்ததால் சாமிகண்ணு(70), அஞ்சலம்மாள்(70), சஞ்சய்(9), நிகாஷ்(14) ஆகியோர் காயமடைந்தனர். இதனை அடுத்து தெருத்தெருவாக ஓடிய வெறிநாய் ராஜேந்திரன்(59), அலமேலு(40), மேகராஜன்(55) என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஈவராஜன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ராஜன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு ராஜனின் வீட்டிற்குள் ஒரு வாலிபர் நுழைந்ததை உறவினர் சம்பத் என்பவர் பார்த்தார். இதுகுறித்து ராஜன் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மகன்களுடன் தற்கொலை முயற்சி” தாயின் பிடியிலிருந்து மீண்ட சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வகுமார், சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தீபாவளி பண்டிகை தினத்தில் இரவு நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது இதனால் மன உளைச்சலில் இருந்த அங்கம்மாள் தனது மகன்களை மறுநாள் காலை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து மகன்களுடன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள்…. கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் பலி…. திருச்சியில் கோர விபத்து…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் தங்கசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி(64) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது மனைவி உறவினர்களான பூஜா(30), ரஞ்சனா(20) பேரன் பிரதுன் ஆகியோருடன் காரில் நவல்பட்டு பகுதியில் இருக்கும் மருமகன் லட்சுமணன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் திருச்சி சுந்தரம் பிள்ளை தெருவில் வசிக்கும் ராமகிருஷ்ணன்(65) என்பவர் அவரது மனைவி பத்மாவுடன்(60) காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த காரை மோகன்(45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கம்”…. அமைச்சர் திறந்து வைப்பு…!!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியை 1 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 800 மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்கள் அறை அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நேற்று முன்தினம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. இன்ஜினியர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரங்கீஸ்வரன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரங்கீஸ்வரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களான பிரவீன் குமார், அருண்குமார், அன்பன், ராம்கிஷோர் ஆகியோருடன் ரங்கீஸ்வரன் காரில் நாட்டானி கிராமம் முதலை முத்து வாரியில் இருக்கும் அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நாட்டானி பேருந்து நிலையம் அருகே சென்றபோது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. ஹோட்டல் உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!!

அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டி பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இலுப்பூர்- புதுக்கோட்டை சாலையில் ராஜாராம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாராம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு…. பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதில் பெண்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை புது தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருமைதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமியும் அருமைதுரையும் தனித்தனியாக காவல் நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி காலனி தெருவில் தீபன்ராஜ்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடையில் திடீர் தீ விபத்து…. ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடையில் தீ விபத்து ஏற்பட்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் உதிரி பாகங்கள் டயர் விற்பனை மற்றும் கார் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு சந்திப்பிற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக இளையராஜா சென்றுவிட்டார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்….. படுக மொழி அகராதி வெளியீடு…. சிறப்பாக நடைபெற்ற விழா…!!!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முன்மொழி அகராதி நெலிகொலு அறக்கட்டளை சார்பில் படுக மொழி சொற்களின் அர்த்தங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்தனர். நேற்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைத்து அகராதி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு நெலிகொலு அறக்கட்டளை தலைவர் ஆர்.தர்மன் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அகராதியை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அகராதியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகைக்காக வந்த போது…. அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த பாண்டியராஜன் தனது நண்பர்களான பாலகிருஷ்ணன், அருண்குமார், ராஜதுரை, சங்கிலி குமார், ராஜபாண்டி ஆகியோரின் இருசக்கர வாகனத்தில் எம்.புளியங்குளம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது பாட்டில்களை வாங்கி விட்டு வெளியே வந்த போது கண்ணன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“குறைந்த தொகை நிர்ணயம் செய்த நகைக்கடை” வாடிக்கையாளருக்கு 10 ஆயிரம் இழப்பீடு…. அதிரடி உத்தரவு….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி கவுண்டன் பட்டியில் வழக்கறிஞரான சோலைராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு சோலைராஜா மதுரையில் இருக்கும் நகை கடையில் பழைய வெள்ளி நகைகளை கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்கியுள்ளார். அன்றைய நிலவரப்படி பழைய வெள்ளி நகைக்கு 6601.28 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக 5505 ரூபாய் மட்டும் கணக்கிட்டனர். மேலும் புதிய நகைக்காக 1096.20 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலை தீபாவளியை கொண்டாடிய பெண்…. மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சித்தப்பா….பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் மருதுபாண்டி தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் பெற்றோர் ஆதரவுடன் காதல் ஜோடி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தலை தீபாவளியை முன்னிட்டு பவித்ரா தனது கணவர் வீட்டிற்கு முன்பு பட்டாசுகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் பட்டாசு வெடித்த வாலிபர்…. சிதைந்த கை…. பரபரப்பு சம்பவம்…!!!

போதையில் பட்டாசு வெடித்த போது வாலிபரின் கை சிதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்(22) என்பவர் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தனஞ்செய் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து கைகளில் பிடித்தபடி பட்டாசுகளை வெடிக்கச் செய்தபோது ஆட்டோ பாம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்வாய்க்குள் பாய்ந்த வாகனம்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. தர்மபுரியில் கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியானா கார்த்தி(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கட்டிட தொழிலாளியான விஷால் என்பவரும் நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் கார்த்தி, விஷால் ஆகிய இரண்டு பேரும் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனை அடுத்து விழா முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டேங்க் ஆபரேட்டர் எரித்து கொலை…. தாய்-மகள் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

டேங்க் ஆபரேட்டர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகளை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிடலகாரம்பட்டி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சின்னப்பனஅள்ளி ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவசங்கரின் வீட்டிற்கு முன்பு மாசிலாமணி- சஞ்சீவி தம்பதியினர் விறகுகளை கொட்டி வைத்தனர். அதனை அகற்றுமாறு கூறியபோது சிவசங்கருக்கும், சஞ்சீவிக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இண்டிகேட்டர் போட மாட்டியா…?? ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பிமங்கலம் மெயின் ரோட்டில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் ஒரு நோயாளியை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறக்கி விட்டுள்ளார். இதனை அடுத்து கடலூருக்கு செல்வதற்காக வாகனத்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த சதீஷ் என்பவர் வளைவில் திரும்பும் போது இண்டிகேட்டர் போட மாட்டியா? என […]

Categories

Tech |