குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை சிறை பிடித்ததால் பழனி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகில் இருக்கும் ஜவகர் நகரில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கோதைமங்கலம் ஊராட்சிக்கு பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவர்கள் ஆத்திரமடைந்து பழனி தாராபுரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
