மன்னார்குடி நகராட்சி பெண் கணக்காளர் வங்கி காசோலையில் போலி கையெழுத்து போட்டு, 10 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் 2 ஆண்டுகளாக கணக்காளராக சரஸ்வதி என்ற பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 29-ஆம் தேதி 2, 50, 000 ரூபாய் மதிப்பிலான நகராட்சி காசோலையை பணமாக மாற்றி கொண்டு வருமாறு உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.அவரும் அந்தக் காசோலையை கொண்டு சென்று […]
