அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் டிமா ஹசோ மாவட்டத்தில் மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து டிமா ஹசோ மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அதேபோல் கபிலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, […]
