பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலக்கோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் பகுதியைச் சார்ந்தவர் பிரஷாந்த்-சங்கீதா தம்பதியினர். பிரசாந்த் போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். சங்கீதா அப்பகுதியில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் சங்கீதா மிகுந்த […]
