70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]
