Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆம் ஆத்மி முன்னிலை” ‘ஆதரவாளர்களுக்கு ‘ – கெஜ்ரிவால் திடீர் வேண்டுகோள்..!

சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், டெல்லி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நிறைவடைந்த டெல்லி தேர்தல்: 67% வாக்குப்பதிவு, 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் தலைநகாரன டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடந்துள்ள நிலையில், வாக்குபதிவு 67.08 விழுக்காடு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்கே தொடங்கப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: தலைநகரில் வெற்றி யாருக்கு ? கருத்துக்கணிப்பு வெளியீடு …!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை  வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு  நிறைவடைந்தது. கடும் குளிரையும் பொறுப்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். இருந்தும் மந்தமான வாக்குபதிவே பதிவாகியது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் பதிவாகியுள்ளய நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியது. டைம்ஸ் நவ்  , ரிபப்ளிக்  , நியூஸ் எக்ஸ் – நோந்தா ஆகிய மூன்று நிறுவனங்களும் நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி  கட்சியே ஆதிக்கம்  […]

Categories
தேசிய செய்திகள்

இறைவன் மீது பாரத்தைப்போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு, வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னைத் தொடர்பு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வாக்களிக்க வெளியே வாருங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்..!!

வீட்டிலிலுள்ள ஆண்களை அழைத்துச் சென்று பெண்கள் தேர்தலில் வாக்களிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது. இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய கெஜ்ரிவால் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடத்தை வீதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் மீறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ, சமூக நல்லிணக்கத்தை குலைப்பதாக இருக்கிறதெனக் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இரு சித்தாந்தங்களுக்கு இடையே தேர்தல்: அமித் ஷா பரப்புரை.!

டெல்லியில் நடைபெறுவது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரை கூட்டத்தில் கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு கிழக்கு டெல்லியில் உள்ள கொண்ட்லி பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, “குடியுரிமை சட்டத் திருத்தம், அயோத்தியில் ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகிய விவகாரத்தில் தங்களின் வாக்கு வங்கி எங்கே பாதிக்கப்படுமோ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: பாஜக, கெஜ்ரிவால் மீது காங்கிரஸ் தாக்கு

பாஜகவின் கொள்கைகளால் நாட்டு மக்களுக்கு என்ன பயன் என்று வினாயெழுப்பிய சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் தாக்குதல் தொடுத்தார். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஐந்து மணிக்குள் தேர்தல் பரப்புரை நிறைவுபெறுகிறது.இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

மைதில் மொழி பேசும் அகதிகளிடம் பாஜக வாக்கு சேகரிப்பு..!!

மைதில் மொழி பேசும் வாக்காளர்களிடம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாக்கு சேகரித்தார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று, மைதில் மொழி பேசும் அகதிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜே.பி. நட்டாவுடன் துணைத் தலைவர் பிரபாத் ஜாவும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய நட்டா, மைதில் மொழி பேசும் மக்கள் பாஜக கூட்டணிக்குப் பெருமளவு ஆதரவளித்து, டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க துணை நிற்க வேண்டும் என பரப்புரை செய்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்..!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டப் பேரணி நடைபெறவிருக்கிறது. கொண்லி, ஹாஸ் ஹாஸ் பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ரஜோரி கார்டனில் நடக்கும் இப்பேரணியில் முன்னாள் பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

கம்யூனிசத்தின் உண்மையான நகல் கெஜ்ரிவால்: பாஜக முதலமைச்சர் பரப்புரை..!!

அரவிந்த் கெஜ்ரிவால் கம்யூனிசத்தின் உண்மையான நகல் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறினார். டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறியதாவது:- உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு மக்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கிறது. எனக்கு யார் மீதும் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!

சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டுள்ளது இன்னும் 2 நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக ஏற்கெனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போது அளித்து வரும் 200 யூனிட் இலவச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”யாருனு சொல்லுங்க பாக்கலாம்”…. பாஜகவிற்கு சாவால் விடுத்த கெஜ்ரிவால்…!!

நாளை மதியம் 1 மணிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம் என பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், நாளை மதியம் 1 மணிக்குள் டெல்லி பாஜக வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: இன்று வெளியாகிறது ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி, இன்று வெளியிடவுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ள தேசிய தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கடும் முனைப்பில் உள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இன்று தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல் : வெற்றி பெற்றது யார்?… கருத்துகணிப்பு வெளியீடு..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களைகைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி சட்டசபைக்கு வருகின்ற 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் மகுடம் சூடப்போகிறார்கள் என்பது 11 ஆம் தேதி தெரிந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லியில்  நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில்  முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. டெல்லி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் பிரதமர் மோடியின்  தேர்தல் பிரசாரம் இன்று மாலை 2 மணியளவில் கிழக்கு டெல்லி பகுதியான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேலையின்றித் தவிக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் … ” ரூ 7000 வரை ஊக்கத்தொகை” : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..!

டெல்லி:70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட அம்மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பத்தரை மாற்றுத் தங்கம், சந்தேகப்படாதீங்க” மோடியை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேகப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக மெஹ்ரௌளியில் பரப்புரை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான புரிதலை உருவாக்கிவருகிறனர். நம் இஸ்லாமிய தோழர்களை நோக்கி யாரும் கைநீட்ட மாட்டார்கள். நம் பிரதமர் பத்தரை மாற்றுத் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பைக்…. சைக்கிள்…. ரூ 2க்கு கோதுமை …. பாஜக தேர்தல் அறிக்கை ..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை  வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக தேர்தல் அறிக்கையில்  பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட இருக்கின்றது. டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் மகனா? சகோதரானா? பயங்கரவாதியா ? மக்கள் முடிவு செய்வர்கள் – கெஜ்ரிவால்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எப்படி அப்படி சொல்லலாம் ? ”பாஜக எம்.பி.யை கைது செய்யுங்க”ஆம் ஆத்மி போராட்டம் …!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜக எம்.பி. வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்தினர். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்ட சபை தேர்தல் : ஆதரவு தெரிவித்த கமல்.. நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்..!!

நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட் செய்ததையடுத்து, தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.   தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது […]

Categories
மாநில செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் சாதனையாளர்… ஆதரவு தரும் கமல்ஹாசன் !

டெல்லி சட்ட சபை தேர்தலில் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்ட சபை தேர்தல் : ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு…!!

டெல்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் ‘திரிணாமுல் காங்கிரஸ்’ கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

பாஜகவினர் என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி கட்சிகள் தினமும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், அரசானது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரப்புரையில், டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி அல்ல… இவர்களுக்கு புல்லட் தான் கிடைக்கும்… கர்நாடக பாஜக அமைச்சர்..!!

தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று கர்நாடக பாஜக அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, […]

Categories
தேசிய செய்திகள்

“தேச துரோகிகளை சுட்டுத்தள்ளனும்”…. சர்ச்சையாக பேசிய அமைச்சர்… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முழக்கமிட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற  பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் – தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக ஜனவரி 21ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக வேறு காவல் ஆணையர்.!!

ஜனவரி 31ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக தேர்தல் பணிக்காக வேறு காவல் ஆணையரை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. டெல்லி மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரை தேர்தல் பணிக்காக நியமனம் செய்கிறது. இந்த நிலையில், டெல்லி பெருநகர காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் வரும் 31ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் தேதியை அறிவித்தார் சுனில் அரோரா.!

டெல்லி சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.   70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி பேரவையின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுனில் அரோரா பேசியதாவது, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் […]

Categories

Tech |