ரேஷன் கடை விற்பனையாளர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் வடக்கூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் 250 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கவில்லை. அப்போது கடை விற்பனையாளரிடம் பொதுமக்கள் சென்று கேட்டபோது, மறுநாள் விற்பனை செய்யப்படும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். அதன்படி மறுநாள் […]
