தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக பேருந்துகளை இயக்க முடியாததுடன், பணிக்கு வரும் தொழிலாளர்களை அச்சுறுத்தி வேலை செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கழகங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையாக தற்காலிக டிரைவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு மாவட்டங்களிலும் பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சாலை […]
