Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அறையில் தூக்கில் தொங்கிய இளைஞர்… தற்கொலைக்கான காரணம் என்ன…?

 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர், சுந்தர் நகரில் தான் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான சுந்தர் நகரில் வேதாரண்யத்தைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். சிறுவாச்சூர் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், தனது குடும்பத்திலுள்ள பிரச்னைகளை தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பியூட்டி பார்லர் பெண் ஊழியர் சடலமாக மீட்பு… கொலைக்கான காரணம் என்ன?… போலீசார் விசாரணை.!!

நாமக்கல்லில் பியூட்டி பார்லரில் வேலை பார்த்துவந்த பெண் ஒருவர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி வனிதா (எ) சோபனா. இவர், திருச்செங்கோட்டில் உள்ள சுபானா பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். 29 வயதான இவருக்கு தேவா, சச்சின் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை சோபனா வேலைக்குச் சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மீனவர் கப்பல் மோதி உயிரிழப்பு..!!

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சார்ந்த பிலேந்திரன் என்ற மீனவர், வளைகுடா நாடான கத்தார் பகுதியில் இருந்து விசைப்படகில், மீன் பிடிக்கச் சென்ற போது கப்பல் மோதியதில் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையினைச் சார்ந்தவர் பிலேந்திரன் வயது (46). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்ய வளைகுடா நாடான கத்தாருக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வழக்கம் போல சக மீனவர்கள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

‘டீக்கடையில் சண்டை’ – முன்னாள் பாஜக நிர்வாகி படுகொலை….!!

முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர். புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”கணவனின் பிறப்புறுப்பு துண்டிப்பு” தகாத உறவால் மனைவி வெறிச்செயல் …. !!

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் பிறப்புறுப்பைத் துண்டித்து அவருடைய மனைவியே கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சீட்டாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், நேற்று நள்ளிரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல், ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அவருடைய பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளனர்.படுகாயமடைந்த ரஞ்சித் குமார் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : இடிதாக்கி உயிரிழப்பு: ”ரூ.4 லட்சம் நிவாரணம்” முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நேற்று இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடி , மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இடி , மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை….. காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னையில் நர்சிங்  மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் பகுதியை அடுத்த அண்ணாமலை நகர் ராஜுவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மகள் நந்தினி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரம் வீட்டில் தனது அறையில் நந்தினி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் உறங்குகிறாள் என்று அவரது பெற்றோர் அவரை எழுப்ப […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்…. “அம்மாவ பாத்துக்கோ நண்பா” வைரலாகும் ஆடியோ…!!

சென்னை மாதவரம் அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பொன்னிஅம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரக்கூறி வற்புறுத்தியதாகவும், ஆகையால் நான் சாக  போவதாகவும் தனது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இடிதாக்கி 3 பேர் பலி …. 10 பேர் கவலைக்கிடம் ….. 20 பேருக்கு சிகிச்சை ….. புதுக்கோட்டையில் சோகம் …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து  பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் வாகன ஓட்டுனர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வாகன ஓட்டுனரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் வாகனம் ஓட்டி வந்தார். அவரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இந்த கொலையில்  இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோபியான் மாவட்டத்தில் நடந்த மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலில் ஆப்பிள் வியாபாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய சிறுவன்……”அறியாமையால் அகால மரணம்” விழுப்புரத்தில் சோகம்….!!

விழுப்புரத்தில் பல்பொடி என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். பதிமூன்று வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீராம் பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதில் எலி  பேஸ்ட்டை முழுங்கிய அவர் திடீரென வாந்தி எடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது அருந்த பணம் தரல….. விரக்தியில் தீக்குளித்த கணவன்….. உடல் கருகி மரணம்….!!

மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை அடுத்த அயன் வேலூர் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். சுந்தரபாண்டிக்கு  மது அருந்தும் பழக்கம் அதிகமாக உண்டு அந்த வகையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுந்தரபாண்டி. மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வாந்தி-மயக்கம்” பள்ளி மாணவன் திடீர் மரணம்…… போலீசார் தீவிர விசாரணை….!!

விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி பலி…… தூத்துக்குடியில் சோகம்…!!

தூத்துக்குடியில் மீன் பிடிக்க சென்ற பொழுது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வேம்பார் பெரியசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் இவர். மீன் பிடிக்கும்  தொழிலை செய்து வருவதோடு மீனவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தனது சொந்த நாட்டுப் படகில் அவரது நண்பர் தேவ திரவியம் என்பவரது மகனான ஜஸ்டின் அழைத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கடற்கரைகளில் தொடரும் மரணம்…. போலீஸ் நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு….!!

சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் அதிக அளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை காவல்துறையினர் நட்டு வருகின்றனர். சென்னை திருவெற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கேவி குப்பம், ஒண்டிகுப்பம், கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளிப்பதற்கு முன்பு செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து உயிரிழப்பு அதிகம் நடைபெற்ற இடங்களில் அதனை தடுக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”தண்டவாளத்தில் சிக்கிய கைலி” மாண்டு போன நகைக்கடை தொழிலாளி ….!!

தூத்துக்குடியில் தண்டவாளத்தில் கைலி சிக்கியதால் ரயிலில் அடிபட்டு நகைக்கடை தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  தூத்துக்குடி சுந்தரராமன் புரத்தைச் சேர்ந்த பாலகணேஷ் என்பவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பொழுது அவரது கைலி தண்டவாளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த முத்துநகர் விரைவு ரயில் பால கணேஷ் மீது வேகமாக மோதியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடுப்பில் சொருகிய கத்தி…. வயிற்றை கிழித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்….!!

சென்னை அயனாவரத்தில் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை அவசரத்தில் எடுத்தபொழுது அடிவயிற்றில் அறுபட்டு இளைஞர் உயிரிழந்தார். சென்னை  வில்லிவாக்கத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை விட்டுப் பிரிந்த மனைவி சபிதா அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு சென்ற மனோகரன் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சரிதாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் IT ஊழியர் ரயில் மோதி பலி….. செல்போனால் ஏற்பட்ட கோர விபத்து…!!

பெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார்  ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இளைஞர் வெட்டி கொலை…. மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்த கொடூரம்..!!

சென்னையில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங் குப்பம் கெனால் தெருவை சேர்ந்த ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன் (வயது 25) என்பவர் நேற்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு அரிவாளுடன் வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரது  தலை, உடம்பு, கை மற்றும் கால் என சரமாரியாக வெட்டி கொடூர படுகொலை செய்தனர். அதுமட்டுமில்லாமல் ஆத்திரம் அடங்காத அவர்கள் அவரது மண்டையை  இரண்டாக […]

Categories
உலக செய்திகள்

”அதிபரை குறிவைத்து தாக்குதல்” 24 பேர் உடல் சிதறி பலி…!!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப்கானியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உடல் சிதறி பலியாகினர் ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வருகின்ற 28_ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பர்வான் மாகாணத்தில் உள்ள சரிகார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கனி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”மோட்டார் மற்றும் பேருந்து மோதி விபத்து” கிருஷ்ணகிரியில் 3 பேர் பரிதாப பலி…!!

கிருஷ்ணகிரி தபால்மேடு பகுதியில் பேருந்தும் , இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர்  உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரையடுத்துள்ள தபால்மேடு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருக்கும் போது மல்லப்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த சோமேஸ்வரன் தனது இரண்டு நண்பர்களுடன் ஒரே  இருசக்கரவாகனத்தில் மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதினர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சோமேஸ்வரன் மற்றும் அவரின் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ”பின்லேடன் மகனை முடித்து விட்டோம்” ட்ரம்ப் உறுதி….!!

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளனர்.  ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது. இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் […]

Categories
மாநில செய்திகள்

“இனி பேனர் கட் அவுட் வைக்க கூடாது”…. அப்படி வச்சிங்கன்னா நா வரமாட்டேன்… எச்சரிக்கும் ஸ்டாலின்..!

திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர்  ஒரு பொறியியல் பட்டதாரி.  கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான…. “அதிமுக பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல்..!!

இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில்  அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

அரசின் அலட்சியம்… இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?…. முக ஸ்டாலின் கண்டனம்..!!

அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில்  அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. […]

Categories
தேசிய செய்திகள்

செத்து விட்டார்… அடக்கம் செய்தாச்சு…. உறவினர்கள் முன் நின்ன அதிசயம்…!!

அடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் கருதப்பட்டவர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம்பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். 49 வயதான இவர் மனநோயால் பாதிக்கப்பட்டராவார். கடந்த மாதம் 26ஆம் தேதி  சஞ்சீவ் குமார் காணாமல் போயுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் தேடிய இவரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையும் தேடி வந்த நிலையில் உறவினர்களும் காத்திருந்தனர்.ஒரு நாள்  சஞ்சீவ் குமார் வீட்டிற்கு அருகில் இருந்த ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிடைத்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் “பேனர் விழுந்து விபத்து”…. இளம்பெண்பரிதாப பலி.!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது பேனர் விழுந்ததில் கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.   சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில்  அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

”திருமணத்திற்கு மறுப்பு” காதலன் கண் முன் காதலி தற்கொலை…!!

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா.  நிஷா செவிலியர் பட்டப்படிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் குதித்து தற்கொலை…. காரணம் என்ன…?? போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிந்தி பேட்டை அருகில் உள்ள அண்ணா சாலை மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கூவத்தில் திடீரென்று குதித்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்மற்றும் தீயணைப்பு துறைக்கு .தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலத்திலிருந்து ஏணி மூலம் குளத்தில் இறங்கி தேடினார்கள். சேறும் சகதியும் இருந்ததால் ஒரு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… 2 பேர் பலி…. ஓசூரில் கோர விபத்து..!!

ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஓசூரை அடுத்த கருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் சதீஷ் ஆகியோர் ஓசூர் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி முனிவர்மன் என்பவருடன் சின்ன ரத்தினம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வளைவில் வாகனத்தை  இரு திறப்பினரும் வேகமாக திருப்பியதில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீ ராம் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி.!!

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீ ராம் மாரடைப்பால் மரணமடைந்தார்.   ஆலயம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து உருவாக்கியவர்  60 வயதான  ஸ்ரீராம். அந்நிறுவனம் சார்பில் முதல் படமாக விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படம் உருவானது. அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘திருடா திருடா’, ‘பாம்பே’ ஆகிய படங்களை தயாரித்தது. நடிகர் தல அஜித் குமாருக்கு ஆரம்ப காலத்தில் முக்கியமான  படமாக அமைந்த ”ஆசை” படத்தை  தயாரித்து ஆலையம் நிறுவனம் தான். இந்நிறுவனம் கடைசியாக தயாரித்து வெளியான […]

Categories
தேசிய செய்திகள்

1…. 2….3….. ”எல்லாமே வேஸ்ட்” நொந்து போன ராகுல் …!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி  மக்களிடம் பேசும் போது அடுத்தடுத்து மைக் வேலை செய்யாததால் அவர் நொந்து போயினார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – […]

Categories
தேசிய செய்திகள்

”வயநாட்டில் ராகுல்” வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார்…!!

கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் முதல் பெண் டிஜிபி மரணம்… அதிகாரிகள் இரங்கல்..!!

நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். 1973ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சன் சௌத்ரி 1974 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பிஜேபி ஆக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி அதிகாரி என்ற சாதனையை படைத்தார். தனது பதவியிலிருந்து 2007ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரியானா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் […]

Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள முதல்வர் வேண்டுகோள்…. நிறைவேற்றிய தூத்துக்குடி கல்லூரி… குவியும் பாராட்டு…!!

கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் பரபரப்பு…காதல் தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவன்…!!

கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நேபாள நாட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி பயின்று வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விடுதிக் காப்பாளர் கணேசன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாளில் 2 பேரை கொன்ற காட்டு யானை…. பீதியில் மக்கள்..!!

கோவை அருகே 2 நாட்களில் 2 பேரை யானை மிதித்து கொன்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த காட்டுயானை அவர்களை விரட்டியது. இதில் பிரேம் கார்த்தி என்பவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியுள்ளனர். இதேபோல நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை நம்பும் கேரளா ”மீண்டும் தமிழ் ட்வீட்” அசத்திய பினராய் விஜயன் ….!!

கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் மீண்டும் தமிழில் ட்வீட் செய்துள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பீகார் முதல்வர் மரணம்… 3 நாள் துக்கம் அனுசரிப்பு..!!

பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் ஜெகநாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் காலமானார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து பின் அரசியலில் காலடி எடுத்து வைத்த ஜெகநாத் மிஸ்ரா 1975,1980, மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் பதவி காலத்தில் இருந்த பொழுது மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், 2013 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் தண்டனையாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரள வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழப்பு..!!

கேரளா வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் யானை தாக்கியதில் லாரி ஓட்டுநர் பலி..!!

கோவை மாவட்டத்தில் துடியலூர் அருகே காட்டு யானை ஓன்று தாக்கியதில் லாரி  ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இந்நிலையில் பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த  லாரி ஓட்டுநரான கணேசன் (வயது 27) நள்ளிரவில் பணியை முடித்துக்கொண்டு  தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது திடீரென […]

Categories
உலக செய்திகள்

செல்ஃபியால் ஏற்பட்ட சோகம்… இளம்பெண் உயிரிழப்பு..!!

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் பாறைகள் நிறைந்த பகுதியில் செல்ஃபி எடுக்கும் போது  தவறி விழுந்து உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின்  டைமண்ட் வளைகுடா என்ற இடத்திற்கு அவ்வப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அதன்படி சென்ற  சனிக்கிழமையும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதில்  27 வயது மதிக்கத்தக்க ஒரு  இளம்பெண்  200 அடி உயரமுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் செல்ஃபி  எடுக்கும்போது காற்று மிகவும் பலமாக வீசியது. இதனால் தன் நிலைதடுமாறிய அப்பெண்  கால் இடறி […]

Categories
தேசிய செய்திகள்

புதைந்து போன மக்கள்…”தோண்டி எடுக்கும் ரேடார்”… தீரா வலியில் கேரளா….!!

கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல்… இந்திய வீரர் ஒருவர் வீர மரணம்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி  சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில்  போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில்   பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழில் 5 ட்வீட் ”உங்களை போல யாருமில்லை” அசத்திய கேரள முதல்வர் …!!

கேரளாவுக்கு உதவுங்கள் எங்களுக்கு உதவி வேண்டுமென்று கேரளா முதல்வர் அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை வச்சு செய்ய போகும் மழை…. “இன்றும் ரெட் அலர்ட்” எச்சரிக்கை …!!

கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எட்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , […]

Categories
தேசிய செய்திகள்

91 பேர் மரணம்… 34 பேர் காயம் …. 59 பேர் மாயம் ….. கேரளாவை புரட்டிய மழை…!!

கேரளாவை உலுக்கிய கனமழையால் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா தவறான உறவு ”மாண்டு போன குடும்பம்” மகள் Whatsapp செய்தி….!!

அப்பாவின் தவறான உறவால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.  பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள் சித்தையா , ராஜேஸ்வரி . இவர்களுக்கு இரண்டு மகள்கள்  மானசா , பூமிகா. இதில் மானசா +2_வும் , பூமிகா 10_ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.48 வயதான சித்தையா மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். சித்தையா_வுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் குடும்பத்தில் தினம் தினம் சண்டை அரங்கேறியுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த சண்டை மொத்த குடும்பமும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி பலி..!!!

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழந்தனர்.   திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார் கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டி பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 30) டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி வயது 25 என்பவர் ஆவார். இவர்கள் தனது வீட்டின் அருகே  துணிகள் காயப்போடுவதற்க்காக கம்பியாலான கொடியைக் கட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று காற்றானது அதிவேகமாக வீசியதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியது. இது தெரியாமல்  ஜான்சிராணி அவர்  காயப்போட்ட துணியை எடுத்துள்ளார்.   அப்போது அவரை மின்சாரம் தாக்கி […]

Categories
உலக செய்திகள்

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்..!!

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் உடல்நலக் குறைவால் காலமானார். அமெரிக்காவில்  உலக புகழ் பெற்ற கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன்  Beloved,  Song of Solomon போன்ற பல்வேறு புத்தகங்கள் எழுதி  நோபல் பரிசு பெற்றார்.  டோனி மாரீசன் எழுதிய சுதந்திர வேட்கை, இனவிடுதலை போன்றவை பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தனது 40 வயது முதல் புத்தகத்தை எழுதி வந்த நிலையில் அடுத்தடுத்து எழுதிய ஆறு நாவல்களால் பெரும் புகழ் பெற்றார். இவர் தற்போது 88 வயதில் நியூயார்க்கில் உடல்நலக்குறைவால் காலமானார். […]

Categories

Tech |