கரோலி மாவட்டத்தில் மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டத்திலுள்ள மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்ராம் குர்ஜார்(15). இவர் நேற்று காலை அதேகிராமத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவலர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]
