பழுதடைந்த சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் வசித்து வருபவர் வைகுண்டம். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வைகுண்டம் அப்பகுதியில் உள்ள ஒரு சமையல் எரிவாயு ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். அதே ஏஜென்சியில் திருவேங்கடத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் என்பவரும் தாழையூத்தை சேர்ந்த காளி என்பவரும் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பழுதடைந்த ஒரு சிலிண்டரை பசுபதி பாண்டியன் மற்றும் காளி ஆகியோர் வைகுண்டம் வீட்டிற்கு லோடு […]
