பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த முதலையை மீனவர்கள் பிடித்து விட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலவடையான் கிராமத்தில் சித்தேரி என்ற குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தில் இருந்த முதலை இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் குளத்தில் கிடந்த முதலையை இரண்டு நாட்களாக கண்காணித்துள்ளனர். ஆனால் முதலை குளத்திலிருந்து வராததால் வனத்துறையினர் பொதுமக்களிடம் அது வெளியே வந்தால் உடனடியாக தகவல் […]
