பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இங்கு செய்யப்படும் மண்பானைகள் அழகர் மலையின் அடிவாரத்தில் செய்யப்படுகிறது. அங்குள்ள மண்ணில் கலக்கும் நீரில் மூலிகை குணங்கள் காணப்படுவதால் அங்கு செய்யப்படும் பானைகளுக்கு அவை தனிச்சிறப்பு சேர்க்கிறது. இதனால் தான் இந்த மண்பானைகளை வாங்குவதற்கு மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இப்பகுதிகளுக்கு […]
