சிறிது சிறிதாக சர்வாதிகாரத்திற்கு பலியாகி வரும் சூழல் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இவ்வாறு கூறினார், எவ்வளவோ நெருக்கடிகளை எல்லாம் உலக நாடுகள் சந்தித்திருக்கிறது. பல நாடுகள் ராணுவத்திற்கு அடிமையாகிவிட்டது. அண்டை நாடுகளே ராணுவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு தான் இருந்தது உதாரணமாக மியான்மர் பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ படுகொலைகளுக்கு ஆளாகியிருந்தது. இந்தியா ஒன்றுதான் […]
