சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கின்னகொரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டத்தில் இவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு சிறுத்தை பசு மாட்டின் மீது பாய்ந்து கடித்து குதறியதால் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனையடுத்து தனது மாடு வீட்டிற்கு திரும்பி […]
