பெலுடா எனப்படும் புதிய பரிசோதனை முறை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா தற்பொழுது இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக பிசிஆர் எனப்படும் பரிசோதனை முறை நடைமுறையில் உள்ளது. இந்த பரிசோதனையில் ஒரு பரிசோதனைக்கு ரூபாய் 2400 வரை செலவாகும். மேலும் இப்பரிசோதனையில் கோரானோ முடிவினை தெரிந்துகொள்ள இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியதிருக்கும். தற்போது இந்திய […]
