கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி […]
