கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . திருவண்ணாமலை அருகே கீழ் பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் என்ற சிறிய கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்த்து அதை இரண்டு பேர் பாக்கெட்களில் போட்டு விற்பனை செய்துவந்துள்ளனர் . இதனை அப்பகுதி கூலி வேலை செய்வோர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வாங்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . இதனால் அப்பகுதியில் உள்ள குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் […]
