செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் – 44, கூடுவாஞ்சேரியில் -23, கேளம்பாக்கத்தில் – 6, அச்சிறுப்பாக்கத்தில் – 4, செங்கல்பட்டில் – 3 பேர் உட்பட மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 267 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். மேலும் கோயம்பேடு சந்தை சென்று […]
